யார் இந்தப் புரட்சிப் பெண்???!!!!!!!

பரத நாட்டியக் கலையில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கிய பாரதம் போற்றும் பெண்மணி, 1904 ஆம் நீலகண்ட சாஸ்திரி- சேஷம்மாள் தம்பதிக்கு மகளாகப் பிறந்தார்.,நீன்லகண்ட சாஸ்திரி அடையாறிலுள்ள தியோசபிகல் சொசைட்டியின் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டார். அப்பொழுது பிரம்ம ஞான சபையின் தலைவராக இருந்த அன்னிபெசண்ட்டிடம் உதவியாக இருந்தவர் ஆங்கிலேய டாக்டர் அருண்டேல், நீலக
ண்ட சாச்த்திரியினுடைய மகளின் துறுதுறுப்பும் அழகும் அருண்டேலை ஈர்க்க, 16 வயதே ஆன அந்த பெண்ணிடம் தம் காதலை சொன்னார்.,பல்வேறு சிக்கல்களைக் கடந்து 40 வயது ஆன அருண்டேல் அவரை மணந்தார் .,அதன் பிறகு உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இருவரும் ரஷ்யாவில் பாலே நடனத்தின் பால் ஈர்க்கப்பட்டார், பிறகு இந்தியா திரும்பிய உடன் பரத கலையின் மீது ஆர்வம் கொண்டு பாரதத்தை கற்கத் துவங்கினார்.தனது 31 வயதில் பிரம்மா ஞான சபையில் தனது பாரத நாட்டியத்தை அரங்கேற்றம் செய்தார்.இவர் பரதம் பயின்ற காலக் கட்டத்தில் பாரதம் வெறும் தேவதாசிகளுக்கு உரிய நடனமாகவே அன்று பார்க்கப் பட்டது. அதை உடைத்தெறிந்த பெருமைக்குரியவர். பிரம்மா ஞான சபையில் கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளி அன்று இவராலேயே துவங்கப் பட்டது, இன்று பரதம் உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்கிறது.பரதம் நம் மண்ணின் கலை என்று மார்தட்டிக் கொள்ளும் பொழுது பெருமையாகவே இருக்கிறது....யார் இந்தப் புரட்சிப் பெண்மணி???????????????

Comments