தனித்திருந்தேன்.........
நெடுந்தூரம்
நான் கொண்ட
பயணத்தின்
பாதச் சுவடுகளின் ஆழம்
அறியும்
நான் கொண்ட ஒரு
வெற்றியின்
விளிம்பில் ஆயிரம்
தோழ்விகளின் கரைகள்
நான் சுவாசித்த
பொழுதுகள்
எனை நேசிக்கத் துவங்கின
எனை நேசிக்கத் துவங்கின
ஏனோ இருட்டறைக்குள்
அகப்பட்ட மின்மினிப்
பூச்சுகளாய் நெஞ்சம்
பட்டெனப் பறந்துவெக்கி வெக்கித்
தவிக்கிறது
நிலை இல்லா
இந்தப் பொழுதுகளை
எண்ணி !!!!!!!!!

Comments
Post a Comment